search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயானத்தில் தூய்மை பணி"

    நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மயானத்தில் சாலை பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனர். வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னதுரை, கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாலை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வத்தலகுண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வத்தலகுண்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர்கள் தாமரை மாறன், யோகவேல், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் கார்மேகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×