search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியுடன் கள்ளத்தொடர்பு"

    மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் மதுரை வாலிபரை கொன்று கொடைக்கானல் பள்ளத்தாக்கில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கொடைக்கானல்:

    மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 25-ந் தேதி மதுரையில் இருந்து சரவணன், மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு காரில் கொடைக்கானல் வந்தனர். பின்னர் காரை திருப்பி அனுப்பி விட்டனர்.

    கொடைக்கானலில் நண்பர் ஒருவரின் காரை வாங்கி பல இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். இரவில் வட்டக்கானல் பகுதியில் ஒரு விடுதியில் தங்கினர். பின்னர் மணிகண்டனை தனியாக அழைத்துச் சென்ற சீனிவாசன் என்பவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை பள்ளத்தாக்கில் வீசிச் சென்றார்.

    பின்னர் சரவணன், சீனிவாசன், சபரி, மகான் ஆகியோர் வேறு இடத்தில் அறை எடுத்து தங்கினர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது சீனிவாசனை தவிர மற்றவர்கள் தலைமறைவாகினர். இதனிடையே மணிகண்டனை காணாமல் அவரது பெற்றோர் ஜெய்ஹிந்த் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்யப்பட்ட விபரம் தெரிய வந்தது. இதனையடுத்து சரவணன் மற்றும் அவருடன் தங்கி இருந்த நண்பர்களை அழைத்துக் கொண்டு வட்டக்கானல் பகுதிக்கு வந்தனர்.

    நேற்று இரவு வரை தேடியும் உடல் கிடைக்காததால் இன்று மீண்டும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலில் அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து உள்ளனர்.

    ×