search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியிடம் கள்ளத்தொடர்பு"

    • சாமுவேலை நண்பர்கள் 3 பேருடன் சென்று கத்தியால் வயிற்றில் குத்தினார்.
    • மேல்கிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட் டம்,தேன்கனிக் கோட்டை தாலுகா விற்கு உட்பட்ட கெலமங்கலம் துளசி நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 26). கூலித்தொழிலாளி.

    இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (32), என்பவரது மனைவி ரேணுகா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அறிந்த ஜெகதீஷ் பலமுறை கண்டித்துள்ளார். இதை சாமுவேல் கேட்க வில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் நேற்று கெலமங் கலம் ராஜலட்சுமி தியேட்டர் அருகே அமர்ந்திருந்த சாமு வேலை நண்பர்கள் 3 பேருடன் சென்று கத்தியால் வயிற்றில் குத்தினார்.

    படுகாயமடைந்த சாமு வேல் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக் கப்பட்டார். அங்கிருந்து மேல்கிச் சைக்காக ஓசூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக, கெல மங்கலம் போலீசில் சாமு வேல் புகார் செய்தார்.

    இதையடுத்து தலை மறைவாக இருந்த ஜெகதீஷ் மற்றும் ஜெக்கேரி அருகே உள்ள சின்னட்டியை சேர்ந்த விஜய் (25) மற்றும் கெலமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமூர்த்தி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×