search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைபொருட்கள் கடத்தல்"

    • அதிகாலையில் பெங்களூரில் இருந்து புதுவை நோக்கி ஒரு தனியார் சொகுசுபஸ் வந்தது.
    • பஸ்சை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது அப்போது அந்த பஸ்சில் 5 மூட்டைகளில் 150 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன்படி செஞ்சி போலீஸ் டி.எஸ்.பி. பிரியதர்ஷினி மேற்பார்வையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா நல்லான் பிள்ளை பெற்றால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் தலைமையிலான போலீசார் கடலாடிகுளம் கூட்ரோடு பகுதியில் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாலையில் பெங்களூரில் இருந்து புதுவை நோக்கி ஒரு தனியார் சொகுசுபஸ் வந்தது. அந்த பஸ்சை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் 5 மூட்டைகளில் 150 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    உடனே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் அரூர்் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மூர்த்தி (வயது60) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கண்டக்டர் முனுசாமி (47) என்பவரை கைது செய்தனர். 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் போலீசார் பஸ்சில் வந்த பயணிகளுக்கு மாற்று பஸ் மூலம் அவர்களை அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து டிரைவர்் கண்டக்டரிடம் இதை உங்களுக்கு யார் அனுப்பியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

    ×