என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் கொலை வழக்கு"
- கடந்த 11-ந்தேதி சுஜிதா திடீரென மாயமானார்.
- சுஜிதா கொலையில் விஷ்ணுவின் தந்தை முத்து, தம்பிகள் வைஷாக், விவேக், நண்பர் ஷிஹான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவ்வூர் பகுதியை சேர்ந்தவர் சுஜிதா (வயது 26). இவர் அங்குள்ள விவசாயத்துறை அலுவலகத்தில் தற்காலிய ஊழியராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவி வகிக்கும் இவர், துப்பூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விஷ்ணுவும், சுஜிதாவும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி சுஜிதா திடீரென மாயமானார். அதுகுறித்து கருவாரக்குண்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் சுஜிதாவை கொன்று தனது வீட்டின் அருகே, விஷ்ணு புதைத்த விவரம் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சுஜிதாவை அவர் அணிந்திருந்த நகைகளுக்காக கொன்று புதைத்தாக போலீசாரிடம் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
சுஜிதா கொலையில் விஷ்ணுவின் தந்தை முத்து, தம்பிகள் வைஷாக், விவேக், நண்பர் ஷிஹான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பெண் கொலை வழக்கில் கைதாகி உள்ள விஷ்ணு காங்கரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்