search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கொலை வழக்கு"

    • கடந்த 11-ந்தேதி சுஜிதா திடீரென மாயமானார்.
    • சுஜிதா கொலையில் விஷ்ணுவின் தந்தை முத்து, தம்பிகள் வைஷாக், விவேக், நண்பர் ஷிஹான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவ்வூர் பகுதியை சேர்ந்தவர் சுஜிதா (வயது 26). இவர் அங்குள்ள விவசாயத்துறை அலுவலகத்தில் தற்காலிய ஊழியராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவி வகிக்கும் இவர், துப்பூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விஷ்ணுவும், சுஜிதாவும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி சுஜிதா திடீரென மாயமானார். அதுகுறித்து கருவாரக்குண்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் சுஜிதாவை கொன்று தனது வீட்டின் அருகே, விஷ்ணு புதைத்த விவரம் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சுஜிதாவை அவர் அணிந்திருந்த நகைகளுக்காக கொன்று புதைத்தாக போலீசாரிடம் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    சுஜிதா கொலையில் விஷ்ணுவின் தந்தை முத்து, தம்பிகள் வைஷாக், விவேக், நண்பர் ஷிஹான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பெண் கொலை வழக்கில் கைதாகி உள்ள விஷ்ணு காங்கரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    ×