என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரபல திருடன் சிக்கினான்"
- மாரண்டஅள்ளி ஏ.டி.எம் அருகில் சந்தேகப்படும்படி நபர் ஒருவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் ஏ.டி.எம். மையத்திற்குள்ளேயே திருடனை மடக்கி பிடித்தனர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் ,மாரண்டஅள்ளியில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வரும் எழுத படிக்க தெரியாத பொதுமக்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி அவர்களின் ஏ.டி.எம் கார்டு மற்றும் ரகசிய குறியீடு எண்ணை பெற்றுவிட்டு அவர்களிடம் வேறொரு ஏ.டி.எம் கார்டு கொடுத்து அனுப்பி விட்டு உடனடியாக வேறு பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில் முழு பணத்தையும் திருடி பலரை ஏமாற்றி வந்த பலே திருடனை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 18-ம் தேதி நமாண்டஅள்ளியை சேர்ந்த பால் ஊற்றும் தொழிலாளி நந்தகுமார் மனைவி சரஸ்வதி (வயது40) என்பவர் மாரண்டஅள்ளி அங்குள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்தார்.
இவருக்கு ஏ.டி.எம். இல் பணம் எடுக்க தெரியாது என்பதால் அவரிடம் அருகிலிருந்த நபர் ஒருவர் உதவி செய்வது போல் பேசி பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார்.
அவரிடமிருந்து ஏ.டி.எம். கார்டு மற்றும் ரகசிய குறியீடு நம்பரை பெற்று பணம் எடுத்து தருவது போல் நடித்துள்ளார். பின்னர் உங்கள் ஏ.டி.எம் கார்டு வேலை செய்யவில்லை. வங்கியில் சென்று கேளுங்கள் என கூறி தன்னிடம் உள்ள வேறொரு ஏ.டி.எம் கார்டு கொடுத்து அனுப்பி விட்டார். பின்னர் உடனடியாக வேறு பகுதியில் உள்ள ஏ.டி.எம்.க்கு சென்று அவரது கணக்கில் இருந்து 6 ஆயிரத்து 900 ரூபாய் எடுத்துள்ளார்.
இது குறித்து சரஸ்வதி மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த நூதன கொள்ளையனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாரண்டஅள்ளி ஏ.டி.எம் அருகில் சந்தேகப்படும்படி நபர் ஒருவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் மற்றும் போலீசார் ஏ.டி.எம். மையத்திற்குள்ளேயே திருடனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பாரதியார்நகரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ரவி (வயது36) என்பதும், ஏ.டி.எம் திருட்டில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளைசிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்