search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் காய்ச்சும் போராட்டம்"

    • தனியார் பால் உற்பத்தியாளர்களுடன் ஆவின் நிர்வாகம் கூட்டு சேர்ந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது.
    • ஆவின் நிர்வாகம் தனியார் மயமாக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்ட பந்தலிலேயே சமையல் செய்து, சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அனுப்பட்டி பொதுமக்கள் கூறியதாவது:-

    அனுப்பட்டி கிராமத்தில் உள்ள இரும்பு உருக்காலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ஆலையின் உரிமத்தை ரத்து செய்து ஆலையை மூட வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த உருக்காலையை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடஉள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×