search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத்திமா அன்னை"

    விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    விருத்தாசலத்தில் உள்ள பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆலய பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 5-ந்தேதி இரவு சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்து கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி, சிறப்பு பிரார்த்தனை நடந்து வந்தது. கடந்த 12-ந்தேதி சிறிய தேர்பவனி மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவின் முக்கிய திருவிழாவான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், பாத்திமா அன்னையின் சொருபம் வைக்கப்பட்டது. பின்னர் தேர்பவனியை குருத்துவ பொன்விழா நாயகர் புதுச்சேரி அருட்பணி பெஞ்சமின் தொடங்கி வைத்தார்.

    தேவாலயத்தில் இருந்து புறப்பட்ட தேர் ஜங்சன்ரோடு, பஸ்நிலையம், பாலக்கரை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அப்போது ஏராளமான சிறுவர், சிறுமிகள் ஏசு கிறிஸ்துவின் பாடல்களை பாடிய படி தேருக்கு முன்னால் சென்றனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு விழா நிறைவடையும் நிகழ்ச்சி நடந்தது. 
    ×