என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாகிஸ்தானியர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தானியர்"
அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இஸ்லாமாபாத்:
அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கள் நாடுகளுக்கு திரும்பாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களை கைது செய்து, நாடு கடத்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்தவர்கள், குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என பாகிஸ்தானை சேர்ந்த 53 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.
அவர்களை தனிவிமானம் மூலம் பாகிஸ்தான் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த 53 பேரில் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தவிர மற்ற 52 பேரும் பலத்த பாதுகாப்புடன் தனி விமானத்தில் பாகிஸ்தான் புறப்பட்டனர்.
அந்த விமானம் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தது. இதையடுத்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரும் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கள் நாடுகளுக்கு திரும்பாமல் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களை கைது செய்து, நாடு கடத்த ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்தவர்கள், குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என பாகிஸ்தானை சேர்ந்த 53 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.
அவர்களை தனிவிமானம் மூலம் பாகிஸ்தான் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த 53 பேரில் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தவிர மற்ற 52 பேரும் பலத்த பாதுகாப்புடன் தனி விமானத்தில் பாகிஸ்தான் புறப்பட்டனர்.
அந்த விமானம் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தது. இதையடுத்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரும் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. #Pakistanis #TerroristList
வாஷிங்டன்:
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதியன்று 166 பேர் சாவுக்கு காரணமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய இயக்கம் லஷ்கர் இ தொய்பா இயக்கம். இந்த இயக்கம் ஏற்கனவே பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் தடை செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த இயக்கத்தை சேர்ந்த 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
அவர்கள், அப்துல் ரகுமான் அல் தாகில், ஹமீத் அல் ஹசன், அப்துல் ஜப்பார் ஆவார்கள்.
இவர்களை சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முன்னதாக அப்துல் ரகுமான் அல் தாகில் சர்வதேச பயங்கரவாதியாகவும், 3 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளி வந்தன.
ஆனால் 3 பேருமே சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்து இப்போது அது குறித்த முறையான அறிவிப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்டு உள்ளது.
3 பேரில் அப்துல் ரகுமான் அல் தாகில், இந்தியாவில் 1997-2001 ஆண்டுகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் செயல்பாட்டு தலைவர்.
2004-ம் ஆண்டு இவரை ஈராக்கில் வைத்து இங்கிலாந்து படைகள் சிறை பிடித்தன. அதைத் தொடர்ந்து அவர் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க காவலில் மாறி மாறி வைக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு அவர் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் அவரை விடுவித்ததும், அவர் 2016-ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு வந்து, அதன் ஜம்மு பிராந்திய தளபதி ஆனார்.
இப்போது சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து இருப்பதால், இவரால் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு நிதி ஆதாரங்கள் திரட்டுவது தடுக்கப்பட்டு உள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.
பிற நடவடிக்கைகளுடன், அமெரிக்க எல்லைக்குள் உள்ள இவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவருடன் அமெரிக்கர்கள் யாரும் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மற்ற இரு பயங்கரவாதிகளான ஹமீத் அல் ஹசன், அப்துல் ஜப்பார் ஆகியோர் பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு நிதி அளிக்கவும் உதவி உள்ளனர் என அமெரிக்க நிதித்துறை மற்றும் நிதி உளவுப்பிரிவு கீழ்நிலை செயலாளர் சிகால் மண்டேல்கர் கூறினார். இவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டன.
ஹமீத் அல் ஹசன், 2016-ம் ஆண்டு, லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான பாலாஹ் இ இன்சானியத் அறக்கட்டளைக்காக வேலை செய்து உள்ளார். லஷ்கர் இ தொய்பாவுக்காக இவர் தனது சகோதரர் முகமது இஜாஸ் சப்ராசுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு நிதி அனுப்பி வந்து இருக்கிறார்.
அப்துல் ஜப்பாரும் லஷ்கர் இ தொய்பாவுக்கு நிதி சேகரித்து அனுப்புவதில் முக்கிய பங்கு வகித்து வந்து உள்ளார்.
ஒரே நேரத்தில் பாகிஸ்தானியர் 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கி இருப்பது, புதிய ஆட்சி அமைய உள்ள நேரத்தில் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதியன்று 166 பேர் சாவுக்கு காரணமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய இயக்கம் லஷ்கர் இ தொய்பா இயக்கம். இந்த இயக்கம் ஏற்கனவே பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் தடை செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த இயக்கத்தை சேர்ந்த 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
அவர்கள், அப்துல் ரகுமான் அல் தாகில், ஹமீத் அல் ஹசன், அப்துல் ஜப்பார் ஆவார்கள்.
இவர்களை சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முன்னதாக அப்துல் ரகுமான் அல் தாகில் சர்வதேச பயங்கரவாதியாகவும், 3 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளி வந்தன.
ஆனால் 3 பேருமே சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்து இப்போது அது குறித்த முறையான அறிவிப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்டு உள்ளது.
3 பேரில் அப்துல் ரகுமான் அல் தாகில், இந்தியாவில் 1997-2001 ஆண்டுகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் செயல்பாட்டு தலைவர்.
2004-ம் ஆண்டு இவரை ஈராக்கில் வைத்து இங்கிலாந்து படைகள் சிறை பிடித்தன. அதைத் தொடர்ந்து அவர் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க காவலில் மாறி மாறி வைக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு அவர் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் அவரை விடுவித்ததும், அவர் 2016-ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு வந்து, அதன் ஜம்மு பிராந்திய தளபதி ஆனார்.
இப்போது சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து இருப்பதால், இவரால் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு நிதி ஆதாரங்கள் திரட்டுவது தடுக்கப்பட்டு உள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.
பிற நடவடிக்கைகளுடன், அமெரிக்க எல்லைக்குள் உள்ள இவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவருடன் அமெரிக்கர்கள் யாரும் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மற்ற இரு பயங்கரவாதிகளான ஹமீத் அல் ஹசன், அப்துல் ஜப்பார் ஆகியோர் பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு நிதி அளிக்கவும் உதவி உள்ளனர் என அமெரிக்க நிதித்துறை மற்றும் நிதி உளவுப்பிரிவு கீழ்நிலை செயலாளர் சிகால் மண்டேல்கர் கூறினார். இவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டன.
ஹமீத் அல் ஹசன், 2016-ம் ஆண்டு, லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான பாலாஹ் இ இன்சானியத் அறக்கட்டளைக்காக வேலை செய்து உள்ளார். லஷ்கர் இ தொய்பாவுக்காக இவர் தனது சகோதரர் முகமது இஜாஸ் சப்ராசுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு நிதி அனுப்பி வந்து இருக்கிறார்.
அப்துல் ஜப்பாரும் லஷ்கர் இ தொய்பாவுக்கு நிதி சேகரித்து அனுப்புவதில் முக்கிய பங்கு வகித்து வந்து உள்ளார்.
ஒரே நேரத்தில் பாகிஸ்தானியர் 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கி இருப்பது, புதிய ஆட்சி அமைய உள்ள நேரத்தில் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக இன்று இந்தியாவுக்குள் நுழைந்தவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். #Pakistanimannabs #BSF
அகமதாபாத்:
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம், கவாடா பகுதியில் உள்ள
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரான் என்ற இடத்தில் உள்ள எல்லை கம்பம் 1085 மற்றும் 1090-க்கு இடைப்பட்ட பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஒருவர் நுழைய முயன்றதை கண்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனது பெயர் ராஜு என்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்த கைபேசியும் மூன்று சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. #Pakistanimannabs #BSF
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டம், கவாடா பகுதியில் உள்ள
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரான் என்ற இடத்தில் உள்ள எல்லை கம்பம் 1085 மற்றும் 1090-க்கு இடைப்பட்ட பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஒருவர் நுழைய முயன்றதை கண்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனது பெயர் ராஜு என்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்த கைபேசியும் மூன்று சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. #Pakistanimannabs #BSF
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X