என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்சில் கூடுதல் கட்டணம்"

    • தனியார் பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்த கண்டக்டரிடம் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை.
    • இதுகுறித்து டி.எஸ்.பி., ஆர்.டி.ஓ.விடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    திருச்செந்தூர் முருகன் கோவில் அர்ச்சகராக பணிபுரிபவர் கண்ணன். இவர் வத்தலக்குண்டுவில் இருந்து கெங்குவார்பட்டிக்கு அரசு பஸ்சில் வந்தார்.

    ரூ.10 டிக்கெட் எடுத்து பயணித்த கண்ணன் மீண்டும் திரும்பி வரும்போது ஒரு தனியார் பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    தான் வரும்போது ரூ.10 மட்டுமே கொடுத்ததாகவும், எதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்று கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால்அவர் முறையான பதில் அளிக்கவில்லை. இதனை யடுத்து வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். அங்கும் அங்கும் சரியான பதில் கிடைக்க வில்லை என்பதால் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகனிடம் புகார் அளித்தார்.

    விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து அவர் அங்கிருந்து சென்றார்.

    ×