search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறவைகளுக்கு குடிநீர்"

    • 3 இடங்களில் தினமும் தண்ணீர் வைத்து வருகின்றனர்
    • காக்கைகள் தண்ணீர் குடிப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்

    குடியாத்தம்:

    கோடை காலத்தை கருத்தில் கொண்டு பறவைகளின் தாகம் தீர்க்க ேபாலீஸ் நிலையங்களில் பறவைகளுக்காக பாத்திரங்களில் தண்ணீர் வைக்குமாறு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அறிவுறுத்தினார்கள்.

    உயரதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து குடியாத்தம் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா உள்ளிட்ட போலீசார் காவல் நிலைய வளாகத்தில் பறவைகள் தாகம் தீர்க்க 3 இடங்களில் தினமும் தண்ணீர் வைத்து வருகின்றனர்.

    வெயில் நேரத்தின் போது தினந்தோறும் காக்கைகள் தேடி வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானைகளில் தண்ணீர் அருந்தி தாகத்தை தீர்த்துக் கொள்கிறது.

    காக்கைகள் தண்ணீர் குடிப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    ×