search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்க் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய"

    • கூட்டமாக இருந்ததாலும், ஊழியர்கள் பற்றாக்குறை யாலும் வாகனங்களுக்கு பெட்ரோல் போட கால தாமதமானது.
    • ஆத்திரமடைந்த கும்பல் ஊழியர்களை சரமாரியாக தாக்கியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கொடைரோடு மாவுத்த ம்பட்டியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30). இவர் கொரடை ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் வந்தார். அப்போது அங்கு கூட்டமாக இருந்ததாலும், ஊழியர்கள் பற்றாக்குறை யாலும் வாகனங்களுக்கு பெட்ரோல் போட கால தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் பங்க் ஊழியர் எடிசனிடம் எனக்கு ஏன் சீக்கிரம் பெட்ரோல் போடவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடு பட்டார்.

    பின்னர் சரமாரியாக எடிசனை தாக்கினார். இதை தடுக்க வந்த மற்றொரு ஊழியர் கிறிஸ்டோபரும் தாக்கப்பட்டார். அதிலும் ஆத்திரம் அடங்கhமல் தனது நண்பர்களான திலீப், சந்தோஷ் ஆகிேயாரை செல்போன் மூலம் அழைத்து எடிசன் மற்றும் கிறிஸ்டோபரை கும்பல் கடுமையாக தாக்கியது.

    இதில் காயமடைந்த அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீசார் திலீப் மற்றும் சந்ேதாசை பிடித்து விசா ரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர்.

    ×