என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பங்க் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய"
- கூட்டமாக இருந்ததாலும், ஊழியர்கள் பற்றாக்குறை யாலும் வாகனங்களுக்கு பெட்ரோல் போட கால தாமதமானது.
- ஆத்திரமடைந்த கும்பல் ஊழியர்களை சரமாரியாக தாக்கியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே கொடைரோடு மாவுத்த ம்பட்டியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30). இவர் கொரடை ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் வந்தார். அப்போது அங்கு கூட்டமாக இருந்ததாலும், ஊழியர்கள் பற்றாக்குறை யாலும் வாகனங்களுக்கு பெட்ரோல் போட கால தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் பங்க் ஊழியர் எடிசனிடம் எனக்கு ஏன் சீக்கிரம் பெட்ரோல் போடவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடு பட்டார்.
பின்னர் சரமாரியாக எடிசனை தாக்கினார். இதை தடுக்க வந்த மற்றொரு ஊழியர் கிறிஸ்டோபரும் தாக்கப்பட்டார். அதிலும் ஆத்திரம் அடங்கhமல் தனது நண்பர்களான திலீப், சந்தோஷ் ஆகிேயாரை செல்போன் மூலம் அழைத்து எடிசன் மற்றும் கிறிஸ்டோபரை கும்பல் கடுமையாக தாக்கியது.
இதில் காயமடைந்த அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீசார் திலீப் மற்றும் சந்ேதாசை பிடித்து விசா ரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்