search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவரத்தினங்கள்"

    • முத்து நகைகள் பாரம்பரியமாக தமிழர்களின் வழக்கத்தில் இருக்கின்றன.
    • அழகை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை.

    பெண்களின் அலங்காரப் பொருட்களில் முக்கியமானவை நகைகள். ஆடைகளுக்கு ஏற்ற வகையில் அணியும் ஆடைகளுக்கு ஏற்ற பொருத்தமான நகைகளை அணியும் போதுதான் அலங்காரம் முழுமை பெறும். அந்த வகையில் முத்து நகைகள் பாரம்பரியமாக தமிழர்களின் வழக்கத்தில் இருக்கின்றன. நவீன காலத்திற்கு ஏற்றார் போல் முத்து நகைகள் தற்போது வடிவமைக்கப்படுகின்றன.

    காதணி, மோதிரம் போன்ற சிறிய நகைகள் முதல் ஆரம், ஒட்டியானாம், நெற்றிச்சுட்டி போன்ற பெரிய நகைகள் வரை முத்து நகைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. இவை அழகை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை. முத்து நகைகளை அணிவதன் பயன்கள் இதோ...

    முத்து நகைகள் மனதில் உள்ள எதிர்மறையான எண்ணங்களை நீக்கி, நேர்மறையான எண்ணங்களை அதிகரித்து மனதை அமைதியாக்கும் என நம்பப்படுகிறது.

    நகைகள் அணிவதன் மூலம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலில் ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும். இது முத்து நகைகள் உள்பட அனைத்து நகைகளுக்கும் பொருந்தும். ஜோதிட ரீதியாக முத்து நகைகள் அணிவதன் மூலம் நினைவாற்றலும், தைரியமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    முத்து நகைகள் எதிர்மறை மண்ணங்களை நடுநிலையாக்கி செழிப்பு, அதிர்ஷ்டம் தருவதாகவும் நம்பப்படுகிறது. எளிதில் கோபப்படுபவர்கள், முத்து நகைகள் அணிவதன் மூலம் கோபத்தை கட்டுக்குள் வைக்க நம்முடைய பாரம்பரிய உடையான புடவை அணியும் போது, முத்து நகைகள் அணிவதன் மூலம் உங்கள் தோற்றத்தை மேலும் மேம்படுத்திக்காட்ட முடியும்.

     புடவை மட்டுமல்லாது மற்ற உடைகளோடு அணிவதற்கும் முத்து நகைகள் பொருத்தமாக இருக்கும். வெள்ளை மட்டுமல்லாமல் க்ரீம், கருப்பு, தங்கம், சாம்பல், பிங்க், நிலம் போன்ற நிறங்களிலும் முத்துகள் விளைகின்றன.

    பணிபுரியும் பெண்களுக்கு மனஅழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடிக்கடி மனநிலை மாற்றங்களை சந்திக்கும் பெண்கள் முத்து நகைகளை அணிவதால் மனஅழுத்தம் குறையும்.

    முத்துகளில் காணப்படும் இரும்பு, துத்தநாகம், செலினியம், கால்சியம் போன்ற தாதுக்கள் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். இவை முகப்பருக்கள். கரும்புள்ளிகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.

    முத்து நகைகளில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள், தாதுக்கள் மற்றும் ஆச்சிஜனேற்றிகள் பதற்றத்தை குறைக்கக்கூடியவை. போலியான மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட முத்து நகைகளும் சந்தைகளில் கிடைக்கின்றன. எனவே முத்துகளின் நன்மைகளை பெற விரும்புபவர்கள், உண்மையான முத்துகள் பதிக்கப்பட்ட அணிகலன்களை கண்டறிந்து வாங்க வேண்டும்

    1. கோமேதகம்

    2. நீலம்

    3. பவளம்

    4. புஷ்பராகம்

    5. மரகதம்

    6. மாணிக்கம்

    7. முத்து

    8. வைடூரியம்

    9. வைரம்.

    மகா பாதகங்கள்

    1. கொலை

    2. பொய்

    3. களவு

    4. கள் அருந்துதல்

    5. குரு நிந்தை.

    வாயு-காற்று ஸ்பர்ஷம்: தொடு உணர்வு

    1. ஆகாயம்-வானம்: சப்தம், ஓசை.

    2. வாயு-காற்று ஸ்பர்ஷம்: தொடு உணர்வு

    3. அக்னி-நெருப்பு: (தீ) ரூபம், ஒளி(பார்த்தல்)

    4. ஜலம்-நீர்: ரஸம். சுவை

    5. பிருத்வி-நிலம்: கந்தம், நாற்றம்(மணம்)

    கிரகங்கள்

    1. சூரியன்

    2. சந்திரன்

    3. அங்காரகன்

    4. புதன்

    5. குரு

    6. சுக்ரன்

    7. சனி

    8. ராகு

    9. கேது

    ×