என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேசியக் கருத்தரங்கு"
- பணபரிவர்த்தனையின் தாக்கம் எனும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
- வணிகமும் பொருளாதாரமும் சர்வேதச கொள்கைகளால் உலக மயமாதல், தாராளயமயமாக மாறியுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் "வணிகவியல் மற்றும் மேலாண்மைத்துறையின் சார்பாக", இந்திய பொருளா தாரத்தில் இலக்க முறை பணபரிவர்த்தனையின் தாக்கம் எனும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், கல்லூரியின் தாளாளர் முன்னாள் எம்.பி. பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர், மாவட்ட கவுன்சிலர் வள்ளிபெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர். பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் ஆறிவழகன், வணிகவியல் துறைத்தலைவர் சௌந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஆறுமுகம் கருத்தரங்கில் தொடக்க உரையாற்றினார். மேலாண்மையியல் துறைத்தலைவர் மரகதம் அனைவரையும் வரவேற்றார்.
பெரியார் பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் பிரபாகர் ராஜ்குமார், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தாளாளர் பெருமாள் தனது தலைமையுரையில் "மாணவர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பம், சர்வதேச சந்தைப்படுத்தும் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி நம் நாட்டின் பொருளாதாரம் தற்சார்பு நிறைந்ததாக வளர பாடுபடவேண்டும்", என வாழ்த்தினார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் வணிகமும் பொருளாதாரமும் சர்வேதச கொள்கைகளால் உலக மயமாதல், தாராளயமயமாக மாறியுள்ளது. வளர்ந்துவரும் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக பணமில்லாப் இலக்க பரிவர்த்தனை தற்போது நடைமுறையில் உள்ளது. விரைவில், உலகம் முழுவதும் ஒரேவித கரன்சி வருவதற்கு வாய்ப்புள்ளது. கிரிப்டோ கரன்சி அதற்கு முன் உதாரணம் ஆகும். அதன் நீட்சியாக இன்று மாணவர்கள், புதிய வியாபார உத்தி, ஆன்லைன் விளம்பரங்கள், ஆன்லைன் வணிகம், புதிய பொருட்களை சர்வதேச தரத்தில் தயாரித்தல் போன்ற முயற்சியில் ஈடுபட்டால், உலக அரங்கில் இந்தியப் பொருளாதாரத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச்செல்ல இளம் மாணவர்கள் பாடுபட வேண்டும" என வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர் கள், பேராசிரியர்கள், கலந்து கொண்டு தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். வணிகவியல் பேராசிரியர் மரினா நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாட்டினை, வணிகவியல், மேலாண்மையில் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்