search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி இன்ஸ்பெக்டர்"

    குட்கா முறைகேடு வழக்கில் தூத்துக்குடி இன்ஸ்பெக்டரின் பெயர் இல்லாததால், அவருக்கு முன்ஜாமீன் தேவையில்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #GutkhaCase #HighCourt
    சென்னை:

    தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில் அதிகாரிகள் செந்தில்முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘அதிகாரிகள் இருவரும் கடந்த 45 நாட்களாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் சி.பி.ஐ., சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிட்டனர்.

    அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘இந்த வழக்கின் புலன் விசாரணை முடிவடையவில்லை. இந்த சூழ்நிலையில் அதிகாரிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தற்போதைய சூழ்நிலையில், அதிகாரிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து, ஜாமீன் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பு வக்கீல்கள் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுக்களை வாபஸ் பெற அனுமதித்து, அதை தள்ளுபடி செய்தார்.

    இதேபோல இந்த குட்கா வழக்கில் தூத்துக்குடி, சிப்காட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத், முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    தேவையில்லை

    இந்த மனுவும் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘குட்கா வழக்கில் இன்ஸ்பெக்டர் சம்பத்தை குற்றவாளியாக சேர்க்கவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை மட்டுமே அவரிடம் நடத்தப்பட்டது’ என்றார்.ஃ

    அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘மனுதாரர் மீது வழக்கே இல்லாதபோது, முன்ஜாமீன் தேவையற்றது. அவரது முன்ஜாமீன் மனுவை முடித்து வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார். #GutkhaCase #HighCourt
     
    ×