search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறைமுகம் மதுரவாயல் சாலை திட்டம்"

    பறக்கும் சாலை திட்டப் பணிகள் புதிதாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படுகிறது. மேலும் மதுரவாயல்- பூந்தமல்லி வரை நீடிக்கப்படுகிறது. #MaduravoyalFlyover
    சென்னை:

    போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், துறைமுகத்துக்கு எளிதில் கண்டெய்னர் லாரிகள், சரக்குகளை எடுத்து செல்ல வசதியாக மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் தி.மு.க. ஆட்சியில் ரூ.1815 கோடி மதிப்பீட்டில் நடந்து வந்தது.

    2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக்கூறி பறக்கும் சாலை திட்டத்தை நிறுத்தி வைத்தார். 6 ஆண்டுகளாக பறக்கும் சாலை திட்டம் முடக்கப்பட்டது.

    இந்த நிலையில் 19 கிலோ மீட்டர் துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.2,400 கோடி மறுமதிப்பீட்டில் எல் அண்ட் டி நிறுவனம் இந்த பணிகளை செயல்படுத்துகிறது. துறைமுகம் நேப்பியர்பாலம் அருகில் 14,000 சதுர மீட்டர் கடற்படை நிலம் ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய ஒப்பந்தப் பணிகள் மூலம் இந்த திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து கூவம் ஆற்றில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை பில்லர் அமைக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

    2-வது கட்டமாக மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் பூந்தமல்லி வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டப் பணிகள் ரூ.2,400 கோடியில் மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    மேலும் மதுரவாயல்- பூந்தமல்லி வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் சாலை திட்டப்பணிகள் நீட்டிக்கப்படுகிறது. எல் அண்ட் டி நிறுவனம் பறக்கும் சாலை திட்டப் பணிகளை மேற்கொள்கிறது.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் முயற்சியில் இந்த பணிகள் நிறைவேற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MaduravoyalFlyover
    3 ஆயிரம் கோடி செலவில் உருவாகும் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. #MaduravoyalFlyover
    சென்னை:

    சென்னை துறைமுகத்துக்கு கண்டெய்னர் லாரிகள் சரக்குகளை ஏற்றி, இறக்கி செல்ல வசதியாகவும், சரக்கு போக்குவரத்து விரைவு சேவைக்காகவும் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    மதுரவாயல்-துறைமுகம் 18 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கப்படுகிறது. ரூ.3 ஆயிரம் கோடி செலவில் 6 வழிப்பாதையாக உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது.

    சென்னை துறைமுகத்தில் பறக்கும் சாலை கட்டுமான திட்டப் பணிக்காக கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    சென்னை துறைமுக கழகம், கடற்படை இணைந்து பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் நிலம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பறக்கும் சாலை திட்டப் பணிக்காக நில ஆர்ஜிதம் புனரமைப்பு, மறுசீரமைப்பு ஆகிய பணிகளில் சென்னை துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை ஈடுபட்டுள்ளது.

    மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கூவம் ஆற்றுப் பாதை வழியாக சென்னை துறைமுகத்துக்கு பறக்கும் சாலை வழித்தடப் பாதை விரைவில் அமைக்கப்பட உள்ளது. #MaduravoyalFlyover
    ×