search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துபாய் விமான நிலையம்"

    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    • நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.

    துபாய்:

    ரமலான் நோன்பையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த நிலையில் உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    இந்த நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர். அவர்கள் நோன்பை திறந்த போது விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்து கொண்டிருந்தது.


    இது குறித்து துபாய் விமான நிலைய அதிகாரி கூறும்போது, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான சூழலில் வேலை செய்து வந்தவர்கள் அதனை மறந்து பலரும் விளையாட்டாக பேசிக் கொண்டு மன இறுக்கத்தை மறந்து செயல்பட்டனர்.

    விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

    துபாயில் கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விமான ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 104 நாடுகளில் உள்ள 257 இடங்களுக்கு விமான சேவை உள்ளது
    • 2023 முதல் ஆறு மாதங்களில் 41.6 பயணிகள் வருகை தந்துள்ளனர்

    உலகில் உள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் துபாய் சர்வதேச விமான நிலையமும் ஒன்று. எப்போதும் பரபரப்பானதாக காணப்படும். பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்கான முனைமமாக செயல்பட்டு வருகிறது. விமானங்கள் தரையிறங்குவதும், புறப்படுவதுமாகவும் இருக்கும்.

    கொரோனா தொற்று ஏறக்குறைய முற்றிலும் முடிவடைந்ததாக கருதப்படும் நிலையில், விமான போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை, இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 41.6 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இது 2019-ம் ஆண்டைவிட அதிகமாகும்.

    உலகளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் சேவையில் முன்னணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 104 நாடுகளில் உள்ள 257 இடங்களுக்கு விமான சேவை உள்ளது.

    கடந்த வருடம் இதே காலத்தில் 27.9 மில்லியன் பயணிகள் என்ற வகையில் இருந்தது. தற்போது அதே காலக்கட்டத்தில் சுமார் 50 சதவீதம் அதிகரித்து 41.6 மில்லியன் பயணிகளாக உயர்ந்துள்ளது. விமான நிறுவனங்கள் அதிகமான இடங்களுக்கும், அதிகமான விமானங்களையும் இயக்கி வருகின்றன. 2018-ல் 89.1 மில்லியன் பயணிகள், 2019-ல் 86.3 மில்லியன் பயணிகளை இந்த விமான நிலையம் பார்த்திருந்தது. 2022-ல் 66 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த வருடம் 85 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எமிரேட் நிறுவுனம் கடந்த ஆண்டை காட்டிலும் அதிக அளவில் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் துபாய்க்கு வருகை தருவது அதிகரிப்பு காரணமாக 2.9 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளது.

    ×