என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திருவண்ணாமலை நகராட்சி
நீங்கள் தேடியது "திருவண்ணாமலை நகராட்சி"
திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததால் எழுந்த புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினமும் 75 டன்னுக்கு மேல் இங்கு கொட்டி வருகின்றனர்.
நேற்று குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். குப்பையில் கிடந்த பிளாஸ்டிக் பைகள், டப்பாக்களில் தீ மளமளவென பிடித்தது.
இதனால் குப்பை கிடங்கில் இருந்து நச்சு புகை எழுந்தது. அந்த பகுதியே தெரியாத அளவுக்கு புகை மண்டலமாக உருவானது. ஈசானிய மைதானம் குடியிருப்பு பகுதி மணலூர் பேட்டை ரோடுவரை புகை சென்றதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இது பற்றி நகராட்சி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். குப்பை கிடங்கில் தீ வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தினமும் 75 டன்னுக்கு மேல் இங்கு கொட்டி வருகின்றனர்.
நேற்று குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். குப்பையில் கிடந்த பிளாஸ்டிக் பைகள், டப்பாக்களில் தீ மளமளவென பிடித்தது.
இதனால் குப்பை கிடங்கில் இருந்து நச்சு புகை எழுந்தது. அந்த பகுதியே தெரியாத அளவுக்கு புகை மண்டலமாக உருவானது. ஈசானிய மைதானம் குடியிருப்பு பகுதி மணலூர் பேட்டை ரோடுவரை புகை சென்றதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இது பற்றி நகராட்சி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். குப்பை கிடங்கில் தீ வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X