search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிணாமுல் காங்கிரஸ் கட்சி"

    பாராளுமன்ற தேர்தலின் மூலம் ஆட்சியை விட்டும் அரசியலை விட்டும் நரேந்திர மோடி தூக்கி எறியப்பட வேண்டும் என மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். #LokSabhaElections2019 #Mamata #Modi #throwModi
    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டம், நக்ரக்கட்டா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.

    பிரதமர்  நரேந்திர மோடி தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் நான்கரை ஆண்டு காலத்தை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் கழித்து விட்டார். விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களின் பிரச்சனைகளை கவனிக்க அவருக்கு நேரம் இருந்தது இல்லை என குற்றம்சாட்டினார்.

    ‘கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட வேளையிலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலர் உயிரிழந்தபோதும், பல கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழந்தபோதும் அவர் எங்கே போய் இருந்தார்?



    தேர்தல் நெருங்குவதால் இப்போது உங்கள் வீட்டின் கதவை ஓட்டுக்காக தட்டும் அவர், வாய்க்கு வந்த பொய்களை எல்லாம் உளறிக்கொண்டிருக்கிறார். ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார். பொய் பேசுவதற்கு ஒரு போட்டி வைத்தால் மோடிக்குதான் முதல் பரிசு கிடைக்கும். இந்த தேர்தலிலும் பொய் பேசாதவாறு மோடியின் வாயை ஒட்டிவைக்க வேண்டும்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நமது  நாட்டின் நலன் கருதி ஆட்சியை விட்டும் அரசியலை விட்டும் நரேந்திர மோடி தூக்கி எறியப்பட வேண்டும்’ எனவும் மம்தா தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mamata #Modi #throwModi 
    கொல்கத்தா போலீஸ் - சி.பி.ஐ. மோதல் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க முன்வராததை கண்டித்து பாராளுமன்ற மக்களவையில் இருந்து திரிணாமுல் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TrinamoolMPs #walkoutinLS demanding #PM Modistatement
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் நேற்று பாராளுமன்ற இருஅவைகளிலும் எதிரொலித்தது.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இவ்விவகாரத்தை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நேற்று எந்த அலுவலும் நடைபெறாமல் இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

    இந்நிலையில், இன்று பாராளுமன்றம் கூடியபோது மாநிலங்களவையில் இதே பிரச்சனையை மையமாக வைத்து  திரிணாமுல் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் கோஷமிட்டனர்.

    இதனால், பகல் 12 மணிவரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணிவரையிலும், இறுதியில் நாளை வரையிலும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.


    மக்களவையிலும் இன்று இதேநிலை நீடித்தது. கொல்கத்தா போலீஸ் - சி.பி.ஐ. மோதல் தொடர்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று திரிணாமுல் எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.

    இதனால்,  பகல் 12 மணிவரையிலும்,பிற்பகல் 2 மணிவரையிலும், பின்னர் 4 மணிவரையிலும் சுமித்ரா மகாஜன் அவையை ஒத்திவைத்தார். 4 மணிக்கு பின்னர் அவை கூடியபோது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மக்களவையில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TrinamoolMPs #walkoutinLS demanding #PM Modistatement  
    மம்தா பானர்ஜி தனது கூட்டாட்சி முன்னணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி செல்கிறார். அப்போது அவர் சோனியாகாந்தியை சந்தித்து பேச உள்ளார். #Congress #SoniaGandhi #MamataBanerjee
    புதுடெல்லி:

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்ட காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது.

    குறிப்பாக மாநிலங்களில் வலுவாக உள்ள பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை தனக்கு ஆதரவாக மாற்றலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தனர்.

    ஆனால் மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகள் காங்கிரசிடம் கூட்டணி சேருவதற்கு தயக்கம் தெரிவித்துள்ளன. தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை ஏற்கவில்லை.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூட்டாட்சி முன்னணி என்று ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார். அதற்கு ஆதரவு திரட்டும் வகையில் வருகிற 19-ந்தேதி மிகப்பெரிய கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.

    உத்தரபிரதேசத்தில் வலுவாக உள்ள சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பீகாரில் கணிசமான செல்வாக்கு பெற்ற ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் காங்கிரஸ் கட்சியுடன் சேர ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து பிரதமர் பதவியை கூட்டணி கட்சிக்கு விட்டுத்தர தயார் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    கோப்புப்படம்

    காங்கிரஸ் கட்சி எல்லா வகையிலும் இறங்கி வந்து இருப்பதால் அந்த கட்சியுடன் சேரலாமா? என்று மாநில கட்சிகள் விவாதிக்க தொடங்கி உள்ளன. மம்தா பானர்ஜி தனது கூட்டாட்சி முன்னணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி செல்கிறார். நாளை (புதன்கிழமை) சோனியாகாந்தியை சந்தித்து பேச உள்ளார். அப்போது கூட்டணியில் சேர அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது.

    அதுபோல் ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்சி யாதவ், முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் தனது தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மதசார் பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா ஆகியோரை அதற்கு உதவ கேட்டு கொண்டுள்ளனர். சரத்பவார் மூலம் மாயாவதியிடம் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் கூட்டணி ஏற்படுத்த காங்கிரஸ் முயன்று வருகிறது. ஆனால் பெரும்பாலான கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர தயங்கிய நிலையில் உள்ளது. #Congress #SoniaGandhi #MamataBanerjee
    ×