search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் கலெக்டர்"

    • பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும்.
    • குடியிருப்பு பகுதிகளையும் சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள விழிப்புணர்வு அளித்திட வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவைகளை முறையாக பயன்படுத்திட வேண்டும். அனைத்து மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

    பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் கொசுப்புழு, முதிரி கொசு அழிக்கும் பணிகளுக்கு வருகை தரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பற்றியும் அவற்றின் தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களையும், கொசுப்புழு தடுப்புப் பணியாளர்களையும் ஒருங்கிணைத்து அனைத்து மேல்நிலை மற்றும் தரைநிலை தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்திட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகள் பருவ மழைக்கு முன்னதாக அப்பகுதிகளிலுள்ள அனைத்து அரசு பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் மூன்று நாட்களுக்குள் முழுமையான தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையின் மூலம் காய்ச்சல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், காய்ச்சல் மற்றும் டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அப்பகுதிகளில் காய்ச்சல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்திட வேண்டும்.

    அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கொசுப்புழு, முதிர் கொசு பற்றியும், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள விழிப்புணர்வு அளித்திட வேண்டும்.

    பொதுமக்கள் டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுயமாக மருந்து உட்கொள்ளுதல் மருத்துவர்கள் ஆலோசனையின்றி மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்த வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

    கூட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்சுகந்தி ராஜகுமாரி, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×