search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்ட இயக்குனர் ஆய்வு"

    • மல்லாபுரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நடைபெற்றது.
    • வளர்ச்சிப் பணிகளை திட்ட இயக்குனர் செல்வராணி ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் மல்லாபுரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நடைபெற்றது. மேலும் இந்த திட்டத்தில் 15-வது நிதிக்குழு மல்லாபுரம் பள்ளி கட்டிடம் தடுப்பு சுவர், வடிக்கால் வாய்க்கால் சிமெண்ட் சாலைகள், மயானத்தில் சுற்றுசுவர் சிறு பாலம் பணிகள், ஓடையில் 8 தடுப்பணை பணிகள், குளம் தானியக்களம், நடுநிலைப்பள்ளி மற்றும் ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெறும் சமையல் கூடம் பழுது நீக்கம் செய்தல் போன்ற பணிகளை திட்ட இயக்குனர் செல்வராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செல்வகணேஷ், செல்வதுரை, ஒன்றிய பொறியாளர் ஹரிகிருஷ்ணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நேரு, வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன், துணைத் தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலர் திருமால்வளவன், தொழில் நுட்ப உதவியாளர் நாராயணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் திட்ட இயக்குனர் செல்வராணி அனைவரிடமும் பணி முன்னேற்றம் குறித்து அறிவுரை வழங்கி, பணிகளை சிறப்பாக செய்யுமாறு கூறினார்.

    ×