search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி"

    • ஓசூரில் மாற்று கட்சியை சேர்ந்த 2 ஆயிரம் பேர் தி. மு.கவில் இணையும் நிகழச்சி நடைபெற்றது.
    • மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    ஓசூரில் மாற்று கட்சிகளி லிருந்து 2,000 பேர் விலகி, நேற்று தி.மு.கவில் சேர்ந்த னர். இதையொட்டி, ஓசூர் மூக்கண்ட பள்ளியில் நடந்த விழாவிற்கு மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்று கட்சிகளிலிருந்து விலகிய 2,000 பேர் தி.மு.க. வில் சேர்ந்தனர். அவர்களை வரவேற்று பிரகாஷ் எம்.எல்.ஏ. விழாவில் பேசினார்.

    மேலும் இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் அரியகுளத்தில் மாற்று கட்சினர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.
    • தருமபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மாது முன்னிலை வகித்தார்.

    கிருஷ்ணாபுரம், மார்ச்.19-

    தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழிகாட்டுதல் படி தருமபுரி வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் அரியகுளத்தில் மாற்று கட்சினர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமை வகித்தார்.தருமபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மாது முன்னிலை வகித்தார்.

    இவ்விழாவில் அரியகுளம் ஒன்றிய குழு உறுப்பினர் சிவா ஏற்பாடு செய்திருந்தார். மேலும் ஆண்டி அள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிசாமி மற்றும் ராமஜெயம், சிவசக்த்தி, தேகேஷ், சாமிகண்ணு, சாமிதுரை, சிங்காரவேலு, பார்த்திபன், கரன், சரன் உள்பட பலர் தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமையில் தங்களை தி.மு.க வில் இணைந்து கொண்டனர்.

    இவ்விழாவில் இவ்விழாவில் வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட கழக துணை செயலாளர் வழக்கறிஞர் மணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் மருத்துவர் பிரபு ராஜசேகர், அரூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தென்னரசு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் லட்சுமணன், சோலை. முனியப்பன், செல்லதுரை, பாலாஜி, வழக்கறிஞர் வீரமணி மற்றும் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் திரளாக கலந்துக்கொண்டனர்.

    ×