search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் மீது தாக்குதல்"

    • மது போதையில் வீட்டிற்கு வந்த வெங்கண்ணா அரசு சார்பில் வழங்கப்படும் நிதி உதவியை குடிக்க தர வேண்டும் என கேட்டு தகராறு செய்தார்.
    • வெங்கண்ணா தாயார் தன்னிடம் பணம் இல்லை என கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 63). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் வெங்கண்ணா (21). கணவர் இறந்து விட்டதால் லட்சுமி தனது 2 மகன்களை பாசமாக வளர்த்து வந்தார்.

    வெங்கண்ணா வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் பலருடன் பழக்கம் ஏற்பட்டு மது போதைக்கு அடிமையானார். குடிக்க பணம் கேட்டு தாயாரை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்து வந்தார்.

    நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்த வெங்கண்ணா அரசு சார்பில் வழங்கப்படும் நிதி உதவியை குடிக்க தர வேண்டும் என கேட்டு தகராறு செய்தார்.

    அதற்கு அவரது தாயார் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கண்ணா திண்ணையில் படுத்து கொண்டு இருந்த தாயாரை தரதரவென தெருவிற்கு இழுத்து வந்தார்.

    பின்னர் அவரது கழுத்திலும், வயிற்றிலும் காலால் சரமாரியாக மிதித்து கொடூரமாக தாக்கினார்.

    இதனால் அவரது தாய் வலியால் அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் யாரும் அவரை காப்பாற்ற முன்வராமல் வேடிக்கை பார்த்தனர்.

    வெங்கண்ணா தனது தாயை காலால் மிதிக்கும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இதனை கண்ட காக்கிநாடா போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக வெங்கண்ணாவை கைது செய்து அவரது தாய்க்கு சிகிச்சை அளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமி மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் போலீசார் வெங்கண்ணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×