search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்காலிக சீரமைப்பு பணி"

    • நிலச்சரிவு ஏற்பட்ட மலைகிராமங்களில் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது
    • செல்போன்கள் மற்றும் இணையதள சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணை க்காடு, தடியன்குடிசை, மங்கள ம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கடந்த 29-ம் தேதி அதிகாலை பெய்த கன மழையால் மலைப்பாதையில் உள்ள தாண்டிக்குடி- பட்டலங்காடு பிரிவு இடையே தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது.

    இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதற்கி டையே மணல் மூட்டைகளை அடுக்கி மலைப் பாதை சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்துராஜா, கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் ஆகியோர் இந்த இடத்தை ஆய்வு மேற்கொண்ட னர்.

    மேலும் சாலைகளில் சேதமடைந்த இடங்களை சீரமைக்கப்படும் இந்த பணி இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவு பெறும் மீண்டும் போக்குவரத்து தொடங்கும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கீழ்மலை கிராமங்களில் தொடர் மழை காரணமாக பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. தாண்டிக்குடி பகுதிக்கு செம்பட்டி, வத்தலக்குண்டு பகுதியில் மாற்று மின் வினியோகம் உள்ள போதும், தாண்டிக்குடி, குப்பம்மா ள்பட்டி, கானல் காடு இடையே மின் பாதையில் பாதிப்பு உள்ளதால் சீரான மின் வினியோகம் அளிக்க முடியவில்லை.

    இதனால் செல்போன்கள் மற்றும் இணையதள சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மழை கிராமங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து மின் தடை இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×