என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தந்தையை அடித்து கொன்ற மகன்"
- வாலிபர் மது பழக்கத்துக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். மேலும் மது குடித்து விட்டு வந்து தாய், தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
- தந்தையை சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்து கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகராட்சியில் துப்புரவு பணியாளராக காமராஜர் சாலையை சேர்ந்த நடராஜன் (வயது55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு தினேஷ் (27) என்ற மகன் உள்ளார்.
தினேஷ் மது பழக்கத்துக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். மேலும் மது குடித்து விட்டு வந்து தாய், தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
சம்பவத்தன்றும் குடிபோதையில் வந்த தினேஷ்குமார் தனது தந்தையிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்து தந்தை என்றும் பாராமல் அவரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த நடராஜன் கொைடக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது ெசய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தான் வேலையின்றி சுற்றி திரிந்ததால் தனது தந்தை இறந்தால் வாரிசு வேலை கிடைக்கும் என்று கொலை செய்ததாக கூறி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்