என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது"
- வீட்டின் சுவர் இடிந்து பாதிக்கப்பட்ட யூசுப்பிற்கு அரசு நிவாரண தொகையாக ரூ.4,100 வழங்கப்பட்டது.
- நகராட்சி ஊழியர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி
குன்னூரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. சந்திரா காலனி குடியிருப்பில் நடைபாதைக்காக 40 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. தொடர் மழையால் இந்த தடுப்புச்சுவர் நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் இடிந்து, யூசுப் என்பவரது வீட்டின் மீது விழுந்தது. இதனால் அவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மின் ஊழியர்கள் நடைபாதை ஓரத்திலிருந்த மின்கம்பங்களை மாற்று இடத்தில் அமைத்து மின் இணைப்பு வழங்கினர்.
வீட்டின் சுவர் இடிந்து பாதிக்கப்பட்ட யூசுப்பிற்கு அரசு நிவாரண தொகையாக ரூ.4,100 வழங்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி குமரன் காலனி பகுதியில் செவனம்மாள் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சபீர்கான், கிராம உதவியாளர் அறிவாகரன் மற்றும் வருவாய்த்துறையினர், வீடு இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையான ரூ.4,100 வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்