search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோத்பூர் நீதிமன்றம்"

    ராஜஸ்தானில் இரண்டு பேர் சொந்தம் கொண்டாடியதால் நீதிமன்றத்தில் கன்றுடன் பசு ஆஜர்படுத்தப்பட்டது சுவாரசியத்தை ஏற்படுத்தியது. #Cowbroughttocourt
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் மாண்டோர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு புகார் பதிவானது. அதில், கான்ஸ்டபிள் ஓம் பிரகாஷ் மற்றும் ஆசிரியர் ஷியாம் சிங் ஆகியோர் ஒரு பசுவை சொந்தம் கொண்டாடினர். எனவே பசுவின் உரிமையாளரை கண்டுபிடிக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    போலீசார் பசுவின் உரிமையாளரை கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சொந்தம் கொண்டாடிய பசுமாட்டை கன்றுடன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்..

    இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், பசுவின் உரிமையாளர் யார் என முடிவாகவில்லை. இதையடுத்து பசுவை விலங்குகள் நல காப்பகத்தில் சேர்க்க இருவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். அடுத்த கட்ட விசாரணை வரும் 15ம் தேதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.

    ஒரு பசுவை இரண்டு பேர் சொந்தம் கொண்டாடியதால் நீதிமன்றத்தில் கன்றுடன் அந்த பசு ஆஜர்படுத்தப்பட்டது அப்பகுதியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. #Cowbroughttocourt 
    ×