search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்படுத்த வேண்டும்"

    • சமூக ஆர்வலர் மஞ்சள் மாரிமுத்து கழுத்தில் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
    • ஈரோடு மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் இதேப்போல் காலி மது பாட்டில்களை 10 ரூபாய்க்கு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளி, காங்கேயம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சள் மாரிமுத்து. சமூக ஆர்வலரான இவர் கடந்த 6 மாதமாக காலி பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், அதனால் மக்களுக்கு ஏற்படும் துன்பம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் கழுத்தில் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மது பாட்டில்களை மது பிரியர்கள் பல்வேறு இடங்களில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் காவிரி ஆறு காலிங்கராயன் வாய்க்கால், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் மாசு ஏற்படுகிறது. சில சமயம் மது பாட்டில்கள் காலில் குத்தி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பணிகளும் இதனால் பாதிக்கப்படுகிறது.

    காலி மதுபாட்டில்கள் மலைபோல் குவிந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் எடுக்கும் திட்டத்தை எனது முயற்சியால் நடை முறை படுத்தி உள்ளனர். அதேப்போன்று ஈரோடு மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் இதேப்போல் காலி மது பாட்டில்களை 10 ரூபாய்க்கு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இதேப்போல் அனைத்து வகையான உடைந்த பாட்டில்கள், கண்ணா டிகளை கிலோ ரூ.20-க்கு வாங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வருடத்திற்குள் அனைத்து உடைந்த பாட்டில்களையும் பெற்று விடலாம். இதனால் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    ×