search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமி சிலைகள் அவமதிப்பு"

    • பூசாரி இன்று காலை பார்த்தபோது அம்மன் சிலைகள் மீது சாணத்தை எரிந்து அவமதிப்பு செய்திருந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அம்மன் சிலைகளை அவமதிப்பு செய்த நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எரியோடு:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மீனாட்சிபுரத்தில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் இன்று காலை பார்த்தபோது அம்மன் சிலைகள் மீது சாணத்தை எரிந்து அவமதிப்பு செய்திருந்தனர்.

    இதைபார்த்த பூசாரி அதிர்ச்சி அடைந்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து எரியோடு போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அம்மன் சிலைகளை அவமதிப்பு செய்த நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அசுத்தம் செய்யப்பட்ட சாமி சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பூஜைகள் நடத்தப்பட்டது.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×