search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை போலீஸ் ஏட்டு"

    கோவையில் விசாரணைக்கு சென்ற இடத்தில் திருநங்கையிடம் தவறாக நடந்த போலீஸ் ஏட்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
    கோவை:

    கோவை அம்மன் குளத்தை சேர்ந்தவர் 30 வயது திருநங்கை.

    இவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் வேலை வி‌ஷயமாக வந்த போது என்னுடைய செல்போன் திருட்டு போனது. இது குறித்து நான் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தேன்.

    நேற்று நான் வீட்டில் இருந்தேன். அப்போது ரேஸ்கோர்ஸ் போலீசில் ஏட்டாக வேலை பார்க்கும் 50 வயது மதிக்கத்தக்க போலீஸ்காரர் என்னுடைய வீட்டிற்கு விசாரணை செய்வதற்காக வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். அவர் விசாரணை என்ற பெயரில் என் வீட்டிற்குள் புகுந்து என்னிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசி தவறாக நடந்தார். இதில் அதிர்ச்சியடைந்த நான் சத்தம் போட்டதும் அங்கு இருந்து தப்பிச்சென்று விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    திருநங்கை அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் போலீஸ் ஏட்டு மீது ஆபாசமாக பேசுதல், தவறான நடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள போலீஸ் ஏட்டுவை தேடி வருகிறார்கள்.
    ×