search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் மையம்"

    • மாணவர்களின் உணவு தேவைக்கான அரிசி, பருப்பு, சத்து மாவு, மாணவர்களின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமாயின.
    • பாதிப்படைந்த உணவு பொருட்களை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இம்மைய கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்திருப்பதால் மழை காலங்களில் மழை நீர் கட்டிடத்தினுள் வருவதாக புகார் வந்ததையடுத்து, மேற்கூரை மாற்ற ஒப்புதல் பெறப்பட்டது.

    இதையடுத்து நேற்று அங்கன்வாடி மையத்திற்கு வந்த ஒப்பந்ததாரர், அங்கன்வாடி பணியாளர் இல்லாத நிலையில், மேற்கூரையை உடைத்தெடுத்து சென்றுள்ளார். நேற்று இரவு மழை பெய்த காரணத்தால் கட்டிடத்தினுள் இருந்த அனைத்து பொருட்களும் நீரில் நனைந்து சேதமானது. மாணவர்களின் உணவு தேவைக்கான அரிசி, பருப்பு, சத்து மாவு, மாணவர்களின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமாயின. இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த அங்கன்வாடி பணியாளர் பழனியம்மாள் மேற்கூரை இடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அனுமதியின்றி மேற்கூரை எடுக்கப்பட்டது குறித்து ஒப்பந்ததாரரை கேட்டபோது, பணி ஆணை வழங்கப்பட்டதால், பணிகளை தொடங்கி விட்டோம் என மெத்தனமாக பதில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அங்கன்வாடி மேற்பார்வையாளர் மீனா அவர்களிடம் கேட்டபோது, புளியம்பட்டியில் செயல்பட்டும் வரும் இந்த அங்கன்வாடி பணியாளர் பழனியம்மாள் இரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒப்பந்ததாரர் குழந்தைகள் மைய பணியாளரிடம் தெரிவித்துவிட்டு மேற்கூரையை எடுத்துள்ளார். பாதிப்படைந்த உணவு பொருட்களை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். தற்போது 15 குழந்தைகளை மாற்று கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

    ×