search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிக்க மீண்டும் அனுமதி"

    • அருவிக்கு சீரான அளவு தண்ணீர் வருவதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் குளிக்குமாறு வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கொடைக்கானல், வெள்ள க்கவி, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையினால் கும்பக்கரை அருவியல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 2 நாட்களாக தடை விதிக்க ப்பட்டது. தற்போது மழை குறைந்து அருவிக்கு சீரான அளவு தண்ணீர் வருகிறது. இதனைத் தொடர்ந்து அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

    இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் குளிக்குமாறு வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.70 அடியாக உள்ளது. வரத்து 154 கன அடி. திறப்பு 256 கன அடி. இருப்பு 2033 மி.கன அடி. வைகை அணை நீர்மட்டம் 54.04 அடி. வரத்து 164 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2565 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 48.05 அடி.

    பெரியகுளம் 3.6, தேக்கடி 12.6, கூடலூர் 2, உத்தமபாளையம் 1.4, சண்முகாநதி அணை 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×