search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கை காப்பாற்றி வாலிபர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தது.
    • மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது.

    இதனால் கீழே விழுந்த குரங்கிற்கு மயக்கம் ஏற்பட்டது. இதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் நிதிஷ் என்ற வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு வாயில் தனது வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்தும் அதன் மார்பு மீது இரண்டு கைகளையும் வைத்து அழுத்தியும் கடுமையாக போராடி குரங்கை காப்பாற்றினார். இதனையடுத்து குரங்கு உயிர் பிழைத்து அங்கிருந்து சென்றது.

    மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×