search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேகவிழா"

    • கொள்ளிடம் சீயாளம் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகவிழா நடந்தது.
    • விழாவை முன்னிட்டு முதல் நாள் விநாயகர் பூஜை, கோ பூஜை நடந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீயாளம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது.

    மிகவும் பழமையான இந்த கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு முதல் நாள் விநாயகர் பூஜை, கோ பூஜை நடந்தது.

    தொடர்ந்து யாகசாலை பிரவேசம் தொடங்கி, முதல் நாள் யாகசாலை பூஜை அதனைத்தொடர்ந்து மாலை இரண்டாம் கால யாக பூஜையும், நேற்று காலை மூன்றாவது காலயாக பூஜை தொடங்கி நடைபெற்றது.

    பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், மகா மாரியம்மன் மூலவர் குடமுழுக்கு விழாவும் நடைபெற்றது.

    இதையடுத்து காத்தவராயன் ஆரியமாலா, பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழாவில் உள்ளூர் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×