என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குத்தியவர்களுக்கு வலைவீச்சு"
- பீர்பாட்டிலை உடைத்து வயிறு, கால் தொடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினர். மேலும், தலையிலும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
- இந்த டாஸ்மாக் மது கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே அம்பாத்துறை ரோட்டில் புதுகோடாங்கிபட்டியில் டாஸ்மாக் மது கடை உள்ளது. இந்த கடை பின்புறம் திறந்தவெளியில் 4 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் மது போதையில் தகராறு ஏற்பட்டது.
இதில் செம்பட்டியை சேர்ந்த ஹரிஹரன், திருப்பூரைச் சேர்ந்த சதீஷ், விஜயகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து, அவர்களது நண்பர் திண்டுக்கல் ஓய்.எம்.ஆர்.பட்டியைச் சேர்ந்த குமரவேல் (40) என்பவரை பீர்பாட்டிலை உடைத்து வயிறு, கால் தொடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினர். மேலும், தலையிலும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குமரவேலை பீர் பாட்டில் குத்திய அவரது நண்பர்கள் செம்பட்டி ஹரிகரன், திருப்பூரைச் சேர்ந்த சதீஷ், விஜயகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர். மது போதை தகராறுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் இந்த டாஸ்மாக் மது கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர்.
கடந்த மே 1-ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமியிடமும் கோரிக்கை வைத்திருந்தனர். ஏற்கனவே இந்த மது கடை முன்பு குடிபோதையில் சென்றவர் பள்ளி மாணவன் மீது மோதிய விபத்தில் மாணவன் பலியானான். குடிமகன்களால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்