search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்வாய்கள் கட்டும் பணி"

    • அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடியாத்தம் சந்தப்பேட்டை மாட்டுச்சந்தை பகுதியில் புதிதாக 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டும் பணிகள், சுண்ணாம்புப்பேட்டை புங்கனூர் அம்மன் கோவில் அருகே கழிவுநீர் கால்வாய் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள், தங்கம்நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு 5 லட்சம் ரூபாயில் கட்டும் பணிகளை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளுக்கு குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, கன்னிகாபர மேஸ்வரி, ராணிபாஸ்கர், என்.கோவிந்தராஜ், நவீன்சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு அனைவ ரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரேசன் கடை கட்டும் பணிகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் கல்வெட்டு கட்டும் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    ×