search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி மூதாட்டி பலி"

    • உறவினர் வீட்டுக்கு சென்றார்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே மழையூர் எடப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பன் என்பவரின் மனைவி சகுந்தலா (வயது 72). இவர் நேற்று முன்தினம் மாலை வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் அந்த கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு நடந்து சென்றார். வந்தவாசி- சேத்துப்பட்டு சாலையில் நடந்து செல்லும்போது, அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சகுந்தலாவின் தங்கை சிவகாமி பொன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×