search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி முதல்வர் விளக்கம்"

    புகார் கூறிய மாணவி தன் மீதுள்ள தவறை மறைக்கவே கல்லூரி மீதும் பேராசிரியர்கள் மீது பழி சுமத்தியுள்ளார் என்று கல்லூரி முதல்வர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

    மாணவி புகார் குறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்லூரியின் மீது புகார் கூறியுள்ள மாணவி, கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளின் செல்போனை உடைப்பதும் அவர்களை இழிவாக பேசுவதுடன் தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். திருடிய பொருட்களை டாய்லெட்டில் வீசியுள்ளார்.

    அவரை கல்லூரி விடுதியில் இருந்து நீக்கியதற்கான உத்தரவு கடிதத்தை கடிதம் மூலம் அனுப்பினோம். ஆனால், அந்த கடிதத்தை அவர்கள் வாங்கவில்லை.

    பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது.

    தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கூறிய மாணவி தன் மீதுள்ள தவறை மறைக்கவே கல்லூரி மீதும் பேராசிரியர்கள் மீது பழி சுமத்தியுள்ளார் என்றார்.

    ×