search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ராகுல் நாத்"

    • கலைஞர் திரைப்பட நகரம், கலைஞர் கோட்டம் என பெயர்கள் வைக்கப்பட்டது.
    • ஆட்சி மாற்றம் காரனமாக 10ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையணூரில் தமிழ் சினிமா, சின்னத்திரை தொழிலாளர்களின் நலன் கருதி, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில், அடுக்குமாடி குடியிருப்புகள், படப்பிடிப்பு தளங்கள், தொழில்நுட்ப கூடங்கள் கட்ட 90 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு இருந்தது., இதற்கு கலைஞர் திரைப்பட நகரம், கலைஞர் கோட்டம் என பெயர்கள் வைக்கப்பட்டது.

    ஆட்சி மாற்றம் காரனமாக 10ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது., தற்போது பையணூர் திரைப்பட நகரம் பணிகளை விரைவில் மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். அதற்கான பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி ) துணைத் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் தீனா பையனூரில் அமைக்கப்படுகின்ற திரைப்பட நகரத்தின் நுழைவு வாயில் முன்பு முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவ சிலை அமைக்கப்பட உள்ளது. இதனை விரைவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். எனவும் இந்த நுழைவாயில் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக மாவட்ட ஆட்சியர் உடன் ஆய்வு மேற்கொண்டோம். இந்தத் திரைப்பட நகரத்தில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது.

    இதற்கு முந்தைய காலங்களில் சிறிய காட்சிகள் எடுக்க வேண்டும் என்றாலும் கர்நாடகா கேரளா மும்பை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் தற்போது இங்கு படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இங்கேயே சில காட்சிகளை எடுத்துக் கொள்கிறோம். மிக விரைவில் மேலும் சில படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடைபெறும் என தெரிவித்தார். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

    • திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • குழந்தைகளுக்கு சத்தான உணவு அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆய்வு செய்து வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அப்போது இல்ல நிர்வாகிகளுக்கு, குழந்தைகளுக்கு சத்தான உணவு அளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

    மாவட்டத்தில் அனைத்து குழந்தைகள் இல்லங்களும் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் இல்லங்களில் ஏதேனும் பதிவு செய்யாமல் இயங்கி வருவது அறியப்பட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார். ஆய்வின் போது மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவண குமார், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உடன் இருந்தனர்.

    ×