search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்து வட்டி தொடர்பாக முன்விரோதம்"

    • போலீசார் தீவிர விசாரணை
    • கிணற்றில் வீசப்பட்ட துப்பாக்கியை மீட்க நடவடிக்கை எடுத்தனர்

    வாணாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே மண லூர்பேட்டை - திருவண்ணா மலை சாலை பா.வு.ச.நகர் அங்கன்வாடிமையம் அருகே வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    விசாரணையில் அவர் தேவனூர் பகுதியை சேர்ந்த காசி என்பவரின் மகன் அருள்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தலைமறைவாக இருந்த மாமலைவாசன் (31) மற்றும் அவருடைய கூட்டாளிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அருள்குமாருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முருக்கம்பாடிடம் ஆத்தியந்தல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாம்லைவாசன் என்பவருக்கும் கந்து வட்டி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இதன் காரணமாக அருள்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட மாமலைவாசன் அதற்காக 2 மாதங்களாக பல்வேறு இடங்களில் சென்று திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள்குமார் மணலூர்பேட்டை பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    இதனையறிந்த மாமலை வாசன் மற்றும் அவரது நண்பர்களான தேவனூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (37), கள்ளக்குறிச்சி மாவட் ஆதிதிருவரங்கம் பகுதியை சேர்ந்த சூர்யா (22) ஆகிய 3 பேரும் அருள்குமாரை மோட்டார்சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றனர்.

    அப்போது மாமலைவாசன் பின்னால் வேகமாக துரத்தி சென்று அருள்குமாரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருள்குமாரை இளங்கோவன், சூர்யா,மாமலைவாசன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    இதனையடுத்து கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்திகளை அப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஏரிகளில் வீசிவிட்டு சென்று விட்டனர்.

    இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கொலை நடை பெற்ற இடத்தில் ஆய்வு செய் தார். மேலும் அவர்கள் எந்த வகையான துப்பாக்கியை பயன்படுத்தினார்? என்று விசாரணை நடத்தினர்.

    கிணற்றில் வீசப்பட்ட துப்பாக்கியை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அவர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது, கொடுத்தது யார்? என விசாரித்து வருகின்றனர்.

    ×