என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது"
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
- குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் பாளையம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அரூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த சின்னதுரை மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சின்னதுரையை அரூர் டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா தலைமையிலான காவல் துறையினர் கண்காணித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சின்னதுரை கஞ்சா விற்பனை செய்த போது பிடிபட்டார். மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தொடர் கஞ்சா விற்பனை செய்து வந்த சின்னதுரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சாந்தி , சின்னதுரை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு , சின்னதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்