search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டம் பிடித்த காதல் ஜோடி"

    • காதலர்கள் தங்கள் குடும்பத்துக்கு தெரியாமல் காதலை வளர்த்து வந்தனர்.
    • போலீசார் காதல் ஜோடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (வயது20). மில்தொழிலாளி. அய்யலூர் அருகே கருஞ்சின்னனூரை சேர்ந்தவர் பெரியக்காள் (22). இவர் வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. காதலர்கள் தங்கள் குடும்பத்துக்கு தெரியாமல் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தபோது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை பெற்றோர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என நினைத்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று 2 பேரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். மகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். விரைவில் தங்கள் மகளை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் காதல் ஜோடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×