search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎஸ்பயங்கரவாதிகள்"

    இங்கிலாந்து திரும்ப விருப்பம் தெரிவித்த ஐ.எஸ். பெண் ‌ஷமீமா பேகத்திற்கு குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
    பெய்ரூட்:

    இங்கிலாந்து தலைநகர் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் ‌ஷமீமா பேகம் என்ற மாணவி படித்து வந்தார். இணையதளம் மூலம் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட இவர் தனது பள்ளி தோழிகள் 2 பேருடன் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிரியா சென்று ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தார்.

    அங்கு அவர் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சிரியாவில் ஐ.எஸ். இயக்கம் தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட நிலையில், ‌ஷமீமா பேகம் அங்குள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்துள்ளார். சமீபத்தில் அவர், தான் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், தனது குழந்தைக்காக லண்டன் திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், திருமணம் முடிந்த குறுகிய காலத்திலேயே எனது கணவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்றும், தனக்கு பிறந்த 2 குழந்தைகளும் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறினார்.

    ஆனால் ‌ஷமீமா பேகம் நாடு திரும்ப அனுமதி அளிக்க முடியாது என இங்கிலாந்து அரசு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அகதிகள் முகாமில் ‌ஷமீமா பேகத்துக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
    சிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். #Londonpregnantlady #ISISMillitants
    லண்டன்:

    லண்டனில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைய விரும்பிய அவர்கள், முதலில் துருக்கி சென்று அங்கிருந்து சிரியா சென்றுள்ளனர்.

    அந்நாட்டில் ஆன்லைன் மூலம் பயங்கரவாத அமைப்புகள் ஏற்படுத்திய வாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். சிரியாவின் ரக்காவிற்கு வந்த ஷமீமா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து நபரை மணந்தார். இவர்களுக்கு  2 குழந்தைகள் பிறந்து, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்தன.

    அதன்பின்னர் சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலர் சரண் அடைந்தனர். அப்பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஷமீமா பேகமும் ஒருவர். தற்போது இவர் 9 மாத கர்ப்பமாக இருக்கிறார்.

    இது குறித்து ஷமீமா பேகம் கூறுகையில், 'ஏற்கனவே நான் இரண்டு குழந்தைகளை இழந்த நிலையில், தற்போது வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக லண்டன் திரும்ப விரும்புகிறேன். இந்த முகாமில் இருப்பதால் குழந்தை குறைபாடுகளுடன் இருக்கிறதோ எனும் அச்சத்துடன் இருக்கிறேன்.

    இன்னும் சில தினங்களில் குழந்தை பிறக்கும் தருவாயில் உள்ளது. மீண்டும் நாடு திரும்ப எது வேண்டுமானாலும் செய்யவுள்ளேன். எனது குழந்தையுடன் சேர்ந்து அமைதியான வாழ்வை தொடர ஆசைப்படுகிறேன்' என்றார்.

    கடந்த வாரம் ரக்காவில் நடைபெற்ற தாக்குதலில், தன்னுடன் வந்த சுல்தானா இறந்ததாகவும், தனது கணவர் சிரியா போலீசில் சரண் அடைந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வல்லஸ் கூறும்போது, 'இதுபோன்ற சூழ்நிலையில், அரசாங்கம் அப்பெண்ணை மீண்டும் நாடு திரும்ப கட்டாயம் உதவ வேண்டும். எனினும், அந்த பெண் பயங்கரவாதிகளுக்கு உதவியதால்  சிறை செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது' என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Londonpregnantlady #ISISMillitants

      
    ×