search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிவாயு நுகா்வோர் குறைதீா்க்கும் கூட்டம்"

    • எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்
    • அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதி நிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 28-ந் தேதி பிற்பகல் 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். எனவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா் தங்களது புகாா்கள், குறைபாடுகள் இருந்தால் எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×