search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிக்க வைக்கலாம்"

    • தலைக்கு அதிகமாகக் குளிக்க வைக்கக் கூடாது.
    • சருமம் தாங்கும் அளவிற்குத்தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    பொதுவாகக் குழந்தைகளைத் தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாகக் குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் என பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இதுபோன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    * குழந்தைகளைக் கோடைக்காலத்தில் குளிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதில் குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்குத்தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

    * பச்சிளம் குழந்தை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தை என்றால் முதலில் அந்த தண்ணீரை நம் கைகள் வைத்து வெதுவெதுப்பாக உள்ளதா என பார்க்க வேண்டும்.

    * அதற்குப் பிறகு தான், குழந்தைகளின் காலில் ஊற்றி அதற்கு சரியாக இருந்தால் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். இல்லை என்றால் அதில் சிறிதளவு குளிர்ந்த நீர் சேர்த்து குளிக்க வைக்கலாம்.

    * ஆறு மாத குழந்தை என்றால் அந்த குழந்தையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு குளிக்க வைக்கலாம். ஆனால் சூடான நீராக இருந்தால் முதலில் நம்மால் தாங்க முடியும் என்றால் மட்டும் குழந்தைகளை குளிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம்.

    * பச்சிளம் குழந்தை மற்றும் ஆறுமாதம், ஒரு வருட குழந்தையாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க வைத்தால் தூக்கம் நன்றாக வரும் மற்றும் உடலுக்கு நல்லது என சொன்னால் அது சரியில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் 5-ல்இருந்து 7 நிமிடங்களுக்குள் குளிக்க வைக்க வேண்டும்.

    * கோடைக்காலத்தில் ஆறு மாதங்கள் ஆன குழந்தையாக இருந்தால் மிகவும் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரை பயன்படுத்தலாம்.

    * குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு அல்லது வீட்டில் உள்ள கடலைமாவும் பயன்படுத்தி குழந்தைகளை குளிக்க வைக்கலாம்.

    * ஆறுமாதம் ஆன குழந்தை என்றால் கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் தலைக்கு என கடைகளில் விற்கும் ஷாம்பு அல்லது வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு கூட பயன்படுத்தலாம்.

    * குழந்தைகளின் தலைக்கு குளிக்க வைக்கும் போது முகத்தில் தண்ணீர் வராமல் இருக்க கண்களுக்கு மேல் உள்ள இடத்தில் கைகள் வைத்து குளிக்க வைக்க வேண்டும்.

    * தலைக்கு குளிக்க வைத்த பிறகு, உடலுக்கு குளிக்க வைக்க வேண்டும். சளி பிடித்து இருந்தால் அதிகமாக தலைக்கு குளிக்கவைக்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தலைக்கு குளிக்க வைப்பதை தவிர்க்கலாம்.

    ×