என் மலர்
நீங்கள் தேடியது "எக்ஸ்லேட்டர் பழுது"
- வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அவதி
- உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பழமையான ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை மார்க்க மாகவும், திருப்பதி மார்க்க மாகவும், வேலூர் மார்க்க மாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள மிக முக்கிய ரெயில்வே சந்திப்புகளில் காட்பாடி ரெயில் நிலையமும் ஒன்று. இங்கு 5 பிளாட்பாரங்கள் உள்ளன.
இதில் பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக எக்ஸ்லேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் 2-வது பிளாட்பாரத்திலும் எக்ஸ்லேட்டர் (நகரும் படிக்கட்டுகள்) ஏற்படுத்தப்ப ட்டுள்ளன.
ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள எக்ஸ்லேட்டர் பழுதடைந்துள்ளது. கடந்த நாட்களாக விடுமுறை காரணமாக அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். 2-வது நடைமேடை மற்றும் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்லேட்டர்கள் இயக்கப்படவில்லை.
இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் அதிக பைகள் எடுத்துச் செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு லிப்ட் மட்டும் உள்ளது.
அதனை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கூட்டம் அதிகமாக சேரும்போது பயணிகள் எக்ஸ் லேட்டர்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது அதுவும் இயங்க வில்லை. அடிக்கடி பராமரிப்பு பணி காரணமாகவும் அதன்னை நிறுத்தி விடுகின்றனர்.
உடனடியாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி யுள்ளனர்.






