என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உர்பி ஜாவேத்"

    • பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் உர்பி ஜாவேத்.
    • இவரின் கவர்ச்சியான ஆடையால் பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர்.

    பிரபல தொலைக்காட்சி நடிகையான உர்பி ஜாவேத் இந்தி பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். தனது பிரபலத்தை அப்படியே விட்டு விடக் கூடாது என நினைத்த உர்பி ஜாவேத் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


    உர்பி ஜாவேத்

    மேலும், பொது இடங்களில் படுகவர்ச்சி உடைகளை அணிந்து விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். சமீபத்தில் சன்னி லியோனுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து உர்பி ஜாவேத் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த மேலாடை ஒரு சிலந்தி வலைபோல் இருப்பதைப் பார்த்து புகைப்படக்காரர்கள் சிலர் கருத்துகளைப் பறக்க விட்டனர்.


    உர்பி ஜாவேத் - சன்னிலியோன்

    இதைச் சிரித்துக் கொண்டே ரசித்த உர்பி ஜாவித். அங்கேயே அவர்களுக்கு பதில் சொன்னார். இவர் அணியும் உடைகளால் மாணவர்கள் மனது பாதிக்கப்படுவதாகக் கடுமையான கண்டனம் எழுந்து அடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார்.
    • தற்போது தான் அணியும் ஆடைகள் பலரது உணர்வுகளை புண்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.

    இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை உர்பி ஜாவேத். உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின.

    உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகள் மாணவர்களை பாதிக்க செய்வதாக கண்டனங்களும் எழுந்துள்ளது. ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கவர்ச்சி உடைகள் அணிந்ததற்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.


    உர்பி ஜாவேத்

    உர்பி ஜாவேத்

    இதுகுறித்து வலைத்தளத்தில் உர்பி ஜாவேத் வெளியிட்டுள்ள பதிவில், "நான் அணிந்த உடைகள் மூலம் பலரது உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்'' என்று கூறியுள்ளார். அவரது முடிவை பலர் பாராட்டி உள்ளனர்.

    இன்னும் சிலர் உர்பி ஜாவேத் சொன்னதை நம்பாமல் ஏப்ரல் 1-ந் தேதி என்பதால் முட்டாளாக்க பொய் சொல்கிறார் என்று பதிவுகள் வெளியிட்டுனர். அதேபோன்று மற்றொரு பதிவில், ஏப்ரல் ஃபூல் நான் ரொம்ப சிறுபிள்ளைத்தனமா இருக்கிறேன் என்று எனக்கு தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.

    • உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார்.
    • இவர் அணியும் கவர்ச்சி உடைகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை உர்பி ஜாவேத். உர்பி ஜாவேத் வித்தியாசமான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தன்னை தனித்துவமாக காட்டி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் போன்றவற்றை ஆடைபோல் மாற்றி உடலை மறைத்து எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின.


    உர்பி ஜாவேத் அணியும் கவர்ச்சி உடைகளுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தன் தந்தையை தன்னை ஆபாச நடிகை என்று அழைத்ததாக உர்பி ஜாவேத் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, எனக்கு 15 வயது இருக்கும் போது என்னுடைய புகைப்படத்தை யாரோ ஆபாச வலைதளத்தில் வெளியிட்டு விட்டனர். அதன்பிறகு என்னை ஆபாச நடிகை என்று கூறி என் தந்தை சித்திரவதை செய்தார். அதன் பிறகு தற்கொலை செய்யலாம் என முடிவெடுத்தேன். அந்த தருணத்தில் என் வாழ்க்கைக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தேன்.


    இதனால், 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்கு வந்துவிட்டேன். கொஞ்சக் காலம் கால்சென்டரில் பணிபுரிந்தேன். பிறகு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். அதன் பின் சில சீரியல்களில் நடித்தேன். அந்தச் சமயத்தில் எனக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிலிருந்து ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டேன். இருந்தாலும், தற்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புகழுக்குக் காரணம் அந்த ஒரு வார பிக் பாஸ் வாய்ப்புதான்" என்று கூறினார்.

    ×