search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்திராபதீஸ்வரர் கோவில்"

    • கூத்தாநல்லூர் உத்திராபதீஸ்வரர் கோவில் புஷ்ப பல்லக்கு திருவிழா நடைபெற்றது.
    • இதையடுத்து அன்று காலை பிச்சைக்கு எழுந்தருளிய சாமி வீடு, வீடாக சென்று அரிசி மற்றும் தானியங்கள் பெறும் காட்சி நடை பெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி மரக்கடை உத்திராபதீஸ்வரர் கோவில் புஷ்ப பல்லக்கு திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக சாமிக்கு அபிசேக ஆராதனை நடைபெற்றது.

    இதையடுத்து அன்று காலை பிச்சைக்கு எழுந்தருளிய சாமி வீடு, வீடாக சென்று அரிசி மற்றும் தானியங்கள் பெறும் காட்சியும், தொடர்ந்து அமுதுபடையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தொடர்ந்து இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உத்திராபதீஸ்வரர், வாண வேடிக்கைகள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அமர்ந்து வீதி உலா காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    ×