search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடலநலம் பாதிப்பு"

    பாகூர் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த மனைவி திடீரென இறந்ததால் சிலமணி நேரத்தில் கணவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    பாகூர்:

    புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள ஆதிங்கப்பட்டு சத்யா நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 76). இவரது மனைவி ராதா (68).

    இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகன்களின் பராமரிப்பில் தாய், தந்தை இருவரும் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் ஏழுமலை உடல்நலம் இல்லாமல் இருந்து வந்தார். அவரை மனைவி ராதா உடன் இருந்து நன்றாக கவனித்து வந்தார்.

    நேற்று மாலையில் இருந்து ராதாவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணி அளவில் அவர் திடீரென இறந்துவிட்டார். தன்னை நன்றாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் துக்கம் தாங்காமல் ஏழுமலை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.

    இன்று காலை 11 மணி அளவில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஏழுமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். இருவரது உடலும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டது. ஏற்கனவே ராதா இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்திருந்தனர்.

    இன்று மாலை உடல் தகனம் நடப்பதாக இருந்தது. திடீரென கணவர் ஏழுமலையும் இறந்து விட்டதால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இன்று மாலை அவர்களது உடல் ஆதிங்கப்பட்டு சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

    ×