search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறந்த செல்கள் மறைய"

    • முகம் பளீச்சென்று இருந்தாலே அதுவும் ஒரு அழகுதான்.
    • கடலைமாவை பயன்படுத்தி முகத்திற்கு பயன்படக்கூடிய ஃபேஸ் பேக் தயாரிக்கலாம்.

    முகம் பளீச்சென்று இருந்தாலே அதுவும் ஒரு அழகுதான். வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்பது தவறான கருத்து. முகம் எப்போதும் பொலிவாக இருக்கவும், பார்த்தவுடனேயே பளீச்சென்று இருப்பதற்கு நிறைய கிரீம், பவுடர் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

    நம்ம வீடுகளில், இருக்கின்ற சில பொருட்களை கொண்டு எளிமையான முறையில் நம்மை நாம் பராமரிக்கலாம். முந்தைய காலங்களில் எல்லாம் இப்படி தெருவுக்கு தெரு பார்லர்கள் இல்லையே. அனைவரும் வீடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டே பெண்கள் தங்களை அழகுபடுத்தி வந்தனர்.

    கடலைமாவை பயன்படுத்தி முகத்திற்கு பயன்படக்கூடிய ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ற வகையில் கடலைமாவை பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.

    வறண்ட சருமத்திற்கு கடலைமாவுடன் வாழைப்பழம், கற்றாலை ஜெல் பயன்படுத்தலாம். அல்லது சென்சிட்டிவ் ஸ்கின் என்றால் கடலைமாவுடன் பன்னீர் ரோஜா இதழ் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துகொள்ளலாம். ஆயில் சருமம் என்றால் கடலை மாவுடன் டீ டிக்காசன் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். சாதாரண சருமத்திற்கு பாதாம் ஆயில், முல்தானிமெட்டி ஆகியவற்றை கடலை மாவுடன் சேர்த்து ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.

    வயதுக்கு வந்த பெண்குழந்தைகளுக்கும் பெரிய பிரச்சினையே முகத்தில் உள்ள முகப்பருக்கள் தான். முகப்பருக்கள் நிறைய இருப்பவர்கள் கடலைமாவினை கிரீன் டீயில் கரைத்து அதை முகத்தில் பேக்காக போட்டு வந்தால் நாளடைவில் முகப்பருவில் இருந்தும், அதனால் ஏற்படக்கூடிய தழும்புகளில் இருந்தும் விடுபடலாம். இந்த பேக்கை போட்டு வெதுவெதுப்பான நீரில் ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பளீச்சென்று இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வினை கொடுக்கும்.

    ×